Timeline extension to join teacher training course

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சாந்தி விடுத்துள்ளள அறிவிப்பு செய்தி :

அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புகிற, பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் பிளஸ்-2வில் எந்தப் பாடப்பிரிவில் பயின்றிருந்தாலும், இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி பெறலாம்.

இதற்காக தங்களது 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்கள், அவற்றின் நகல்கள் மற்றும் சேர்க்கைக் கட்டணமாக ரூ.5,000-மும், விண்ணப்பக் கட்டணமாக ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியர் ரூ.250-யும், இதர பிரிவு மாணவ, மாணவியர் ரூ.500-யும் நேரில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 31.08.2017 அன்று மாலை 5.00 மணிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 7373006191, 9444026951, 9994219899, 9942782753 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!