Tomorrow, in the Perambalur district, where the Amma Scheme will take place
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நாளை ஜன.31 அன்று பெரம்பலூர் வட்டத்தில் மேலப்புலியூர் (மேற்கு), வேப்பந்தட்டை வட்டத்தில் கை.களத்தூர் (மேற்கு), குன்னம் வட்டத்தில் பெருமத்தூர் (தெற்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் வரகுபாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என தெரிவித்துள்ளார்.