Under the Right to Compulsory & Free Education Act, students can apply for vacancies; Perambalur Santha Info!
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சோ;க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு இத்திட்டத்தில் டுமுபு அல்லது முதல் வகுப்பில் மொத்தமுள்ள சேர்க்கைக்கான 25 சதவீத இடங்களுக்கு இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கு இரண்டாம் கட்டமாக வரும் அக்.12 முதல் நவ.7 வரை இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலகம் பெரம்பலூர் மற்றும் வேப்பூர் (இ) பேரளி அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம், வட்டார வள மையங்கள் (BRC) ஆகிய மையங்களில் எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சோ;க்க விரும்பும், பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். LKG அல்லது முதல் வகுப்பில் பள்ளியில் சேர்வதற்கு அருகாமையிடம் 1 கி.மீ ஆகும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்பபடும்.
மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இணையதளவழியில் விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கானச் சான்று, மாற்றுத் திறனாளிச் சான்று, மூன்றாம் பாலினத்தவருக்கான சான்று, ஆதரவற்றோர் சான்று போன்ற சான்றுகளை கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.