Vaccination of cattle at the beginning of the camp, the collector PERAMBALUR

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று, கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த முகாமை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா எசனை கிராமத்தில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் மாடுகளுக்கு செலுத்தப்பட்ட ஊசி வழியாக தடுப்பு மருந்து செலுத்தி தொடங்கி வைத்தார்.

கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோய் பாதிக்கப்படும் கோமாரி (கசப்பு) நோய். இந்த நோய்களுக்கான தடுப்பூசி பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 27,ஆயிரம் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு போடப்படவுள்ளது.

கோமாரி நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீர், காற்று மூலமாக மிக வேகமாக பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும், புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும். பால் கறவை மிகவும் குறையும். நோயுற்ற கால்நடைகள் உற்பத்தி குறைவதுடன் சினை பிடிப்பதும் வெகுவாக பாதிக்கும். கறவைப் மாடுகளில் பால் குடித்து வரும் இளம் கன்றுகள் நோய்தாக்கி இறக்கவும் நேரிடும்.

எனவே, இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப்பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். தமிழகம் முழுவதும் நடைபெறும் இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால் மற்றும் வாய்நோய் தடுப்புத்திட்டம் 14 -வது சுற்றின் கீழ் 2018-ம் வருடம் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை மேற்கண்ட நோய்க்கான தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!