Vengalam villagers blocked the road did not provide drinking water for 10 days

பெரம்பலூர் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து சம்பந்த பட்ட அதிகாரிகளிடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று மாலை அரும்பாவூர் – பெரம்பலூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) சேகர், மற்றும் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரும்பாவூர் -பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!