Wild camping in Namakkal way to higher education; Tomorrow starts
நாமக்கல்லில் உயர்கல்வி வழி காட்டுதல் முகாம் நாளை துவங்குகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது:
பிளஸ் 2 முடிந்து மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் விதமாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழிகாட்டுதல் முகாம் வரும் நாளை 21 ம் தேதி துவங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
இந்த முகாமில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் உயர்கல்வி குறித்தும், கலை, அறிவியல் பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் துறைகள் சார்ந்த வழிகாட்டுதலும், உதவித்தொகை, கல்விக்கடன் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். நாளை(21ம் தேதி) துவங்கும் இம்முகாம் 24 ம் தேதிவரை 4 நாள்கள் நடைபெறுகிறது.