Women block the road with empty jugs near Perambalur!

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்புவாசிகள் இன்று காலை குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெரம்பலூர் – அரியலூர் சாலையில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்ட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அதில், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக, மின் மோட்டார் பழுதான காரணத்தால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதை சரி செய்ய கால தாமதமானதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று காலை, சுமார் 8 மணியில் இருந்து சுமார் கால் மணி நேரத்திற்கும் மேலாக, அருகே செல்லும், பெரம்பலூர் – அரியலூர் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த, வருவாய், காவல் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், குடிநீர் வினியோகம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால், பெரம்பலூர் – அரியலூர் சாலையில், சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!