Women demand drinking water, the empty pots with and blocked the road: traffic impact

பெரம்பலூர் மாவட்டம், அருகே குடிநீர் கேட்டு கழனிவாசல் கிராம மக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆடுதுறை ஊராட்சியை சேர்ந்த கழனிவாசல் கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து இன்று காலை 200-க்கும் மேற்பட்டடோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கழனிவாசல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அந்த கிராமத்திலே ஊராட்சி சார்பில் கிணறு வெட்டப்பட்டு அதில் இருந்து குடிநீர் விநியோகம் தினமும் செய்யபடுகிறது. மேலும் குடிநீர் பற்றாகுறையை போக்க அதே கிணற்றில் பக்கவாட்டில் புதிதாக போர் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வரப்படுகிறது.

தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் கிணற்று நீர் வற்றிவிட்டது. இதனால் கழனிவாசல் கிராம மக்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் திடீரென அகரம் சீகூர் to திருமாந்துறை சாலையில் இன்று காலை கைகளில் காலி குடங்களுடன் மற்றும் மண்பாணைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல அறிந்த ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் நடத்தினர். கிராமத்திற்கு உடனடியாக புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தின் பேரில் கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்கள் நடத்திய சாலை மறியலால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!