Blood donation camp in Namakkal on behalf of police
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் ரத்ததான முகாம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர்.கண்ணப்பன் மேற்பார்வையில் டாக்டர்கள் குழுவினர் முகாம் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட காவலர்கள் 23 பேர் மற்றும் ஊர்காவல்படையினர் 3 மற்றும் பொதுமக்கள் 1 மொத்தம் 27 பேர் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் அளித்தவர்களை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.