பெரம்பலூர் அருகே டூவிலர் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் பலியானார்.

பெரம்பலூர் அருகே உள்ள பீல்வாடியை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி சின்னப்பொன்னு (40). இருவரும் தனது வயல்காட்டிற்கு

பயிருக்கு அடிக்க உரம் வாங்குவதற்காக டூவிலரில் பெரம்பலூருக்கு வந்து உரம் வாங்கிகொண்டு தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். டூவிலர் பெரம்பலூர் நால்ரோடு பகுதியில் சென்றபோது சேலத்திலிருந்து அரியலூரை நோக்கிசென்ற லாரி எதிர்பாரதவிதமாக டூவிலர் மீதுமோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்னப்பொன்னு பரிதாபமாக இறந்தார்.அவரது கணவர் ராமர் காயத்துடன் உயிர் தப்பி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சின்னப்

பொன்னுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த

புகாரின் பேரில் பெரம்பலூர்ர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!