சென்னை தியாகராயநகரில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.கடந்த 12-ஆம் தேதி இரவு தெற்கு போக் (Boag) சாலையில் நடிகர் சிவாஜி வீட்டுக்கு அருகே ஜார்ஜ் என்பவர் நடந்து சென்றார். இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்றனர். அதுகுறித்த காட்சிகளை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வழிப்பறிக்கு முந்தைய தினமான 11-ஆம் தேதி இரவே சென்னையில் ஒரே இரவு 14 வழிப்பறிகள் நடைபெற்றன. அதில், சூளைமேடு, நுங்கம்பாக்கத்தில் கொள்ளையில் ஈடுபட்ட அதே கும்பல் 12-ஆம் தேதி முதல் நடைபெறும் ஸ்டார்மிங் ஆபரேஷனில் கைது செய்யப்பட்டது. இந்தநிலையில், அவர்களை, தியாகராயநகர் வழிப்பறி வழக்கிலும் போலீசார் கைது செய்துள்ளனர்.இதனிடையே கைதானவர்களில் இருவர் சூளைமேடு அரும்பாக்கத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நியமதுல்லா, விரல் கார்த்திக் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!