டுவிட்டரில் காவல்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்த இயக்குனர் அமீருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தாய் மற்றும் சகோதரி கண் முன்னே இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர்கள் தாக்கியதாக வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.
இதேபோல் திருச்சியில் ஹெல்மட் அணியாமல் சென்றவர் மீதான காவல்துறையினர் தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இயக்குனர் அமீர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கதோடு செயல்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அமீர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமீர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமீருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.