2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இரு பிரிவில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என்று இளம் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாகர் கூறியுள்ளார்.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16வயதேயான இளம் தூப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாகர். இவர், அண்மையில் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற காமென்வெல்த் தூப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாகர் தங்கம் வென்று அசத்தியிருந்தார். இந்நிலையில், 25 மீட்டர் ஸ்போர்ட் பிஸ்டல் பிரிவிலும் பங்கேற்கப்போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவை தொடர்ந்து, 25 மீட்டர் ஸ்போர்ட் பிஸ்டல் பிரிவிலும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்து வரும் உலகக்கோப்பை மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆகியவற்றில் இருபிரிவிலும் கலந்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!