பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய தீபா பேரவையை சேர்ந்தவரின் மண்டையை அதிமுகவினர் உடைத்தனர்.
பெரம்பலூரில் இன்று சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில், அதிமுகச் செயலாளர் வி.கே சசிகலா, இளவரசி, சுதாகரன், உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதனையொட்டி, பெரம்பலூர் தீபா பேரவையை சேர்ந்த பிச்சை என்பவர் ட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார். இதனை அதிமுகவினர் பிச்சையை தாக்கினர். இதில் பிச்சையின் மண்டை உடைந்தது. இதனால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.