18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3வது நீதிபதி சத்தியநாராயணன் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு 3வது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் வரை தகுதிநீக்க வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை அவர் ஒத்திவைத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!