500, thousand banknotes void in Perambalur demonstration demanding the rescinding of the notification vapas
ரூ.500, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வாபாஸ் பெறக் கோரி பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ரூ.500, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வாபாஸ் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.