Accident near Namakkal 4 people were injured, 7 sheep killed

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் சிலர் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 80 ஆடுகளை வாங்கிக் கொண்டு, ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி தேனிக்கு கொண்டு சென்றனர்.

இந்த வாகனம் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாத்தையங்கார்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த வியாபாரிகள் சின்னதுரை, திருப்பதி, சின்ராஜ், வீராசாமி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் மல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவற்றில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுச்சத்திரம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த வியாபாரிகளை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து போன ஆடுகளையும் ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!