Anna Namakkal in Tamil Development, on behalf of the Government of competitions for college students

நாமக்கல்லில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் அண்ணா அரசு கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொ) வசந்தாமணி தலைமை வகித்தார்.போட்டிகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் விஜயலட்சுமி துவக்கிவைத்தார்.

இதில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளுக்கு நடுவர்களாக கல்லூரி தமிழ் பேராசிரியர்கள் ஞ்கந்தசாமி, அரசு பரமேஸ்வரன், பூபதி, இன்னமுது, அழகிரிசாமி செயல்பட்டனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என உதவி இயக்குநர் தெரிவித்தார். இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!