dhepa team perambalur
ஜெ.தீபா அம்மாபேரவை சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா. இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் ஆலம்பாடியை சேர்ந்த புகழேந்தி தலைமையில் வகித்தார். அதிமுகவில் கட்சியில் இருந்த கிளை, ஒன்றிய பொறுப்பாளர்கள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.