Drinking water pipeline leakage ; Municipal authorities need to repair interest! || குடி நீர் குழாய் உடைப்பு ; நகராட்சி அதிகாரிகள் சரி செய்ய ஆர்வம் காட்ட வேண்டும்!
பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு இடைப்பட்ட சாலை ஓரத்தில் குடி நீர் தேவைக்காக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அந்த குழாய் சேதமடைந்ததால் தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது.
கடுமையான வறட்சி நிலவும் இக்காலகட்டத்தில் சேதமடைந்த தண்ணீர் குழாயை சரி செய்து தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றர்.