முன்னாள் படைவீரர்கள் தங்களது விபரங்களை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

மின்னணு ஆளுமை (E-Governance) திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்கள் / விதவையர்களும் தங்கள் விபரங்களை பதிவு மேற்கொள்ள ஏதுவாக 24 வகையான தகவல்கள் / ஆவணங்களை முன்னாள் படைவீரர் நல அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்கும்படி கோரப்படுகிறார்கள்.

ஏற்கனவே இவ்வலுவலகத்தில் மின்னணு ஆளுமை (E-Governance) குறித்து ஆவணங்கள் சமர்ப்பித்து பதிவு மேற்கொண்ட முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள் மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதுவரை மின்னணு ஆளுமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள் மட்டும் உரிய படிவத்துடன் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வலுவலகம் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏதுவாக அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களும் தவறாமல் ஆவணங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!