Herbal medical training for chickens on the 12th of Namakkal
நாமக்கல்லில் வருகிற 24ம் தேதி நாட்டுக் கோழிகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி நடைபெறுகிறது.
நாட்டுக் கோழியில் ஏற்படும் நோய்களை மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வரும் 24-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோழிகளுக்கான மரபு சார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பகல் 1.30 மணிக்கு நடைபெறும் இந்த பயிற்சியில், பண்ணையாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மருத்துவ ஆராய்ச்சி மையத் தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.