in Perambalur district today swearing the new district revenue officer p.velu
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (04.01.2017) புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பி.வேலு பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆணையர் கலால் பொறுப்பில் பணிபுரிந்து வந்த பி.வேலு பணியிடமாறுதல் மூலம் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராக் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பி.வேலு மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பை வகித்து வந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலமெடுப்பு) துரை பொறுப்புகளை ஒப்படைத்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலுவிற்கு, வருவாய் துறை, வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.