In Perambalur lake Prosopis juliflora to remove trees from lions Club
பெரம்பலூரில் உள்ள பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் சீமைக்கருவேல் மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளது.
நீர்நிலையில் மழைநீர் தேங்குவதால் பாதிப்பிற்கு உள்ளாகும், இயற்கைக்கு எதிராக உள்ள சீமைகருவேல் மரங்களை பொக்ளின் எந்திரத்தை கொண்டு வேருடன் அகற்றும் திட்டம் அரிமா சங்கம் மற்றும் கட்டிட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் இன்று தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக பெரம்பலூர் பெரிய ஏரியில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் தொடக்க நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் மோகன்ராஜ் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். இதில் அரிமா சங்க நிர்வாகிகள் பாபு, மகாதேவன்,முரளி, கட்டிட் கட்டுமான பொறியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.