#In Perambalur The Christmas Festival at the school vidhyalaya Siruvachoor Almighty!
பெரம்பலூர், டிச.25- பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலாய சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் சாரதா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக பங்குதாரர் சங்கீதா முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் எ.ராம்குமார் தலைமை வகித்தார். அவர் பேசும் போது கிறிஸ்துமஸ் பெருவிழா ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடப்படும் விழாவாகும்.
யூதர்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஒளியையும் ஏற்படுத்திய ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது, என பேசினார் . விழாவை பள்ளி ஆசிரியர்கள் ஹேமா, சந்திரோதயம், ஜாய்ஷகிலா, கயல்விழி, சக்தி, நந்தினி, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.