Jallikattu: In Perambalur protest on behalf of DMK district.
Perambalur-dmk-jallikatttu-post-office
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பெரம்பலூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரியும், ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்படி பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் பெரம்பலூரில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் குன்னம்.சி. இராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ம.ராஜ்குமார், நகர செயலாளர் ம.பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!