Kills two children who bathe in the pond near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் சரண் (வயது 10), 5 ஆம் வகுப்பும், அதே ஊரைச் சேர்ந்த ராசு மகன் பெரியசாமி (வயது 12). அல்லிநகரத்தில் 7 ஆம் வகுப்பும் அல்லி நகரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இருவரும் தொண்டப்பாடி கிராமத்தில், செம்மண் வெட்டிய குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் உயிரிழந்தனர். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவர்களை தேடி சென்றனர். சிறுவர்களின் சடலங்களை தேடி வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார், இறந்த சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!