பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடு பலியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி, கள்ளப்பட்டி, வேப்படி பாலக்காடு ஆகிய பகுதியில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் இடி – மின்னல் தாக்கியதில் கள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி மருதை (வயது 55) என்பவரின் பசுமாடு இறந்தது.