not know the identity of the person killed in Government bus crash: police inquiry!
பெரம்பலூர் மாவட்டம், எசனை ஊராட்சிக்கு உட்பட்ட அன்னமங்கலம் பிரிவு சாலை அருகே தனியார் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. அதனருகே வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையில் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.