Perambalur: Chief Minister M.K. Stalin campaigns in support of 4 candidates; MP A. Raja and Minister Sivasankar inspect preparatory arrangements.

முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின், பெரம்பலூர்,குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஒதியம் எனுமிடத்தில் நாளை மாலை 6 மணிக்கு பிரச்சாரம் செய்கிறார்.அந்த இடத்தை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ‌.இராசா.எம்.பி., போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்வையிட்டனர். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.பிரபாகரன் எம்.எல்.ஏ., மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப. பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் செ.நல்லதம்பி, சி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை, ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!