Perambalur: Power outage announced in some parts of the city today due to emergency maintenance!

பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் மற்றும் நகர் பெரம்பலூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வெங்கடேசபுரம், அபிராமபுரம் கிழக்கு & மேற்கு, சுந்தர் நகர், வி.ஐ.பி நகர். விளாமுத்தூர் ரோடு, சங்குபேட்டை, கம்பன் நகர், மேரிபுரம், காமராஜர் வளைவு, பூசாரி தெரு, காந்தி சிலை, சிவன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 24.04.2025 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் சீரான மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!