Perambalur: Public relations project camp in Kurumbalur (South) village
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் (தெற்கு) கிராமத்தில், எதிர்வரும் 11.06.2025 (புதன்கிழமை) அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, குரும்பலூர் (தெற்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக குரும்பலூர் (தெற்கு) கிராம நிர்வாக அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.