Police arrest cannabis seller near in Perambalur
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில், மங்களமேடு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, லப்பைக்குடிக்காடு பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த நபரிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். அந்த நபரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், லப்பைக்குடிக்காடு, ஜமாலியா நகரை சேர்ந்த, உமர்பாரூக் மகன் அஹமது (22) என்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.