Protest Demonstration on behalf of the Hindu Munnani in Namakkal

நாமக்கல் : நாமக்கல் நகரில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், பொம்மிநாய்க்கன்பட்டியில் ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவத்தில் வீடு மற்றும் வாகனங்களை இழந்தவர்களுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

கலவரத்தை அடக்க முயற்சி எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்த முன்னணி மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். நகர பொதுச் செயலாளர் ராஜ்கமல், மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் பேசினர். திரளானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!