Raghavendra Prervana Brindavanam is dedicated to Namakkal
நாமக்கல்லில் ராகவேந்திர மிருத்திக பிருந்தாவனம் பிரதிஷ்டை நடைபெற்றது.
நாமக்கல் பழைய முன்சீப் கோர்ட் வீதியில் மத்வ சேவா சங்கம் சார்பில் ராகவேந்திர மிருத்திக பிருந்தாவனம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இன்று காலை 6மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. காலை 10.15மணிக்கு ஸ்ரீ ராகவேந்திர மிருத்திக பிருந்தாவனம் பிரதிஷ்டை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மத்வ சேவா சங்க தலைவர் வக்கீல் ரகு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விழாவில் நாமக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.