Rajiv Gandhi Panchayat Raj Association Executive Appointment for Namakkal District
நாமக்கல் மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மண்டல ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் மண்டல தலைவர் சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, சங்கத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு நகர காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார், கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வேலு என்கிற பெரியசாமி ஆகியோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி பேசியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் உத்தரவுக்கு இனங்க ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் தனி அமைப்பாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகிகள் பஞ்சாயத்துக்கள் தோறும் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்து கட்சியின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வøயில் செயல்பட வேண்டும் என்று கூறினார். திரளான சங்கநிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.