Republic Day at the Village Council meeting on social auditing the accounts of ration shops
பெரம்பலூர் : பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாய விலைக் கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில் நியாய விலைக் கடைகளின் பதிவேட்டினை சமூக தணிக்கைக்கு உட்படுத்த அரசு ஆணையிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் புறங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளின் கணக்குகளை 26.01.2017 அன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும். எனவே பொதுமக்கள் 26.01.2017 அன்று கிராமசபை கூட்டத்தில் நியாய விலை கடைகளின் சமூகத்தணிக்கையில் தவறாது கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.