Thiruvalluvar Day : TASMAC arrive on January 15 Holiday
பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு வருகின்ற 15.01.2017 (ஞயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்.3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என அறிவித்துள்ளார்.