Temple Night Watchman Vacancy Applications Reception: Namakkal Collector

நாமக்கல் மாவட்ட, கோவில் பாதுகாப்பு பணியிடத்திற்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் முன்னாள் படைவீரர்களுக்கு கோவில் பாதுகாப்பு பணியில் 36 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அந்த பணியிடங்களை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது. எனவே படைப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் கோவில் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் இருந்தால் நாமக்கல் முன்னாள் படைவீரர்கள் நலன் உதவி இயக்குநரை நேரில் அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!