Thank you for Karunanidhi on behalf of the DMK in Namakkal East
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலில நிகழ்ச்சி நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற்றது.
மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். பேராசிரியர் சுபவீர பாண்டியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், புலவர் ராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருணாநிதியின் நிர்வாகத்திறன் மற்றும் பல்வேறு சிறப்புகளை விளக்கிப் பேசினார்கள்.
முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, பொன்னுசாமி, சம்பத்குமார், மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியம், கவுதம், துரைராமசாமி, ஜெகநாதன், அசோக்குமார், நகர செயலாளர்கள் மணிமாறன், சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ், துணை அமைப்பாளர்கள் ராணா ஆனந்த், நந்தகுமார், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை ஆனந்தன், பிரபு உள்ளிட்ட திரளான திமுகவினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.