The competition is for students with disabilities in Namakkal
நாமக்கல்லில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வித்திட்டம் சார்பில் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விளையாட்டு போட்டியினை வட்டார வளமையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் துவக்கி வைத்தார். இதில் ஓட்டப்பந்தையம், தவளை ஓட்டம், பலூன் உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், மாறு வேடப்போட்டி, நடனம், பாட்டுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வட்டார அளவில் நடைபெற்றது.
இதில் 65 தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 105 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரஸ்வதி உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.