The firefighters who went to save the fallen drunken are injured || குடி போதையில் கிணற்றில் விழுந்தவரை காப்பாற்ற சென்ற தீயணைப்பு படை வீரர் படுகாயம்
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குடி போதையில் தவறி விழுந்துவிட்டார். இவரை காப்பாற்றுவதற்கா பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் சென்றிருந்தனர். அப்போது கிணற்றில் இறங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புபடை வீரர்களில் ஒருவரான சரவணன் (வயது 31), என்பவர் தவறி கிணற்றினுள் விழுந்து விட்டார். 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் இல்லாததால் விழுந்த தீயணைப்பு படை வீரர் பலத்த காயமடைந்து இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த மற்ற தீயணைப்பு வீரர்கள் சரவணன், பிரபாகரன் இருவரையும் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.