பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்க்பபட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் குறிப்பிடுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். மேலும் தேர்வு முடிவை www.tcresult.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 25 முதல் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 19-ம் தேதி முதல் – மே 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.