பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என கரூவூல அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கருவூல அலுவலர் தகவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட கருவூலம் மூலமாக ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதுநாள்வரை புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட கருவூலத்தில் ஓய்வூதிய பிரிவை அணுகி விரைவில் புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்