பெரம்பலூரில் இன்று காலை நடந்து சென்ற பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து 10 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் பறித்து சென்றனர்.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தெய்வ அஞ்சுகம் (40). இவர், இன்று காலை அவரது வீட்டின் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், முகவரி கேட்பது போல நடித்து தெய்வ அஞ்சுகத்திடம் அருகே சென்று அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.