பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலையத்தில் வரும் 26ந்தேதி நடைபெற புகார் தீர்வு
முகாமில் புகார் மனுக்கள் அளித்து பயன்பெற காவல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூர் காவல் நிலையத்தில் வரும் 26ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 வரை பொது மக்கள் காவல் நிலையம் மூலம் பிரச்சினைகளை தீர்த்து கொள்ளும் பொருட்டு டிஎஸ்பி தலைமையில் புகார் தீர்வு முகாம் நடைபெற உள்ளது.
எனவே அரும்பாவூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பொது மக்கள் தங்களின் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை மேற்கண்ட தேதியில் நேரில், கொண்டு வந்து அளித்து தீர்வு காணலாம் என்று அரும்பாவூர் காவல் நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.