பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45) விவசாயி. இவர் தனது வயலில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவரது வயலில் திடீரென கரும்பு தீப்பிடித்து எறிந்தது.
உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ பக்கத்து வயலுக்கு பரவாமல் தடுத்தனர்.
இதில் வயலில் பயிரிட்டிருந்த கரும்பு பெரும்பகுதி எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் தொடா;பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.