பெரம்பலூரில், ஓய்வூதியத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி கிராம கோவில் பூசாரிகள் அறநிலையத்துறை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பார்ட்டம் நடத்தினர்.
கிராம பூசாரிகளுக்கு மாதச் சம்பளம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரிய சலுகைகள் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் உள்ள இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
விஷ்வ ஹிந்து பரிக்ஷத் பொறுப்பாளர்கள் உட்பட கோவில் பூசாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் உதவி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.