பெரம்பலூர்: குன்னம் அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(27), மனைவி துர்காதேவி(25). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி தேதி வீட்டில் தனியாக இருந்த துர்காதேவி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து அவது கனவர் வேலாயுதம் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் துர்காதவியை தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இன்று, மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.