பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள வேப்பூர் யூனியன் அலுவலகம் முன்பு உள்ள செல்வகணபதி கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குடம் எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
பால்குடம் ஊர்வலம் பேருந்து நிலையம் அருகில் புறப்பட்டு கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது ஊர்வலத்தில் தீ சட்டி ஏந்தியும் வந்தனர் ஊர்வலத்தில் நூற்றுக் கானக்கான பெண்கள் மஞ்சள் சேலை கலந்து கொண்டனர்.
மேலும் செல்வகணபதிக்கு சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைப்பெற்றது
இதே போல் தேனூர் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், தீசட்டி எந்துதல், அழகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. பால்குடம் ஊர்வலம் வாழை குளத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை வந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.